எகிப்தில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல்: 12 தீவிரவாதிகள் பலி

By ஏஎஃப்பி

எகிப்தில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தீவிரவாதிகள்  கொல்லப்பட்டனர்.

இது குறித்து மினா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "எகிப்தின் தலைநகர் கைரோவின் தென் பகுதியில் பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளுக்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது

இதில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்புப் படையினர் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் இதே பகுதியில் தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 16 போலீஸார் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி அளிக்கு வகையில் பாதுகாப்புப்  படையினர்  தீவிரவாதிகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

18 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

16 mins ago

சினிமா

34 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

28 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

42 mins ago

வலைஞர் பக்கம்

46 mins ago

சினிமா

51 mins ago

மேலும்