அமெரிக்க குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் ட்ரம்ப் மீது 9 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். அந்த வரிசையில் 10-வது பெண்ணாக நியூயார்க்கை சேர்ந்த யோகா ஆசிரியை கரீனா வெர்ஜினியா, ட்ரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நியூயார்க்கில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 1998-ல் நியூயார்க்கில் நடந்த யு.எஸ்.ஒபன் டென்னிஸ் போட்டியை பார்க்க சென்றேன். போட்டி முடிந்து காருக்காக காத்திருந்தேன். அப்போது என்னை நெருங்கிய ட்ரம்ப், தகாத இடங்களில் தொட்டார். நான் அதிர்ச்சியில் நெளிந்தபோது என்னை யார் என்று தெரியவில்லையா என்று ட்ரம்ப் கேட்டார்.
எனக்கான கார் வந்ததும் அதில் ஏறி சென்றுவிட்டேன். எனது குடும்பத்துக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்லவில்லை. எனினும் பொறுப்புள்ள அமெரிக்க குடிமகள் என்ற வகையில் எனக்கு நேரிட்ட அவலத்தை இப்போது பகிரங்கமாக தெரிவித்துள்ளேன்.
டொனால்டு ட்ரம்புக்கு என்னை நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த சம்பவத்தை என்னால் இப்போதும்கூட மறக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
5 mins ago
வணிகம்
17 mins ago
இந்தியா
42 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
சினிமா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
வணிகம்
2 hours ago
சினிமா
2 hours ago