பெட்ரோல், டீசல் விலை ஒரே நாளில் 35% வரை உயர்வு: கடும் நெருக்கடியில் இலங்கை மக்கள்

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 35 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் டீசல் விலை ரூ.75 மற்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்த்தப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

டீசல், பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் அது கிடைக்கவும் இல்லை. வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. டீசலுக்குரிய பணத்தைச் செலுத்த முடியாத சூழலில் இலங்கை உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கையிருப்பு டீசல் தீர்ந்து பெரும் நெருக்கடிக்கு இலங்கை ஆளானது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40,000 டன் டீசல் வழங்கியது. நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. கடந்த மாதம் இரு நாடுகளும் 1 பில்லியன் டாலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து பெட்ரோல், டீசல் வழங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

அடுத்த இரண்டு வாரங்களில் 1, 20,000 டன்கள் டீசல் மற்றும் 40,000 டன் பெட்ரோல் விநியோகம் செய்யவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. 500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான எரிபொருள் உதவியை இலங்கைக்கு வழங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால் உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் தொகையை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கும் நிலையில் இந்தியா மீண்டும், மீண்டும் பெட்ரோல், டீசலை வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் என்பதால் இந்தியா தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

இதனால் இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் விநியோகத்தில் சிக்கலும் நிலவுகிறது. இதனால் சிலோன் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் பெட்ரோல், டீசல் வாங்க கட்டுப்பாடு விதித்தது. இருசக்கர வாகனங்கள் எரிபொருள் விற்பனை நிலையங்களில் ஒருமுறைக்கு ரூ.1,000 வரையே எரிபொருள் நிரப்ப முடியும்.

மூன்று சக்கர வாகனங்கள் ரூ.1,500 வரையும், காா், ஜீப், வேன் ஆகியற்றுக்கு ரூ.5,000 வரையும் எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. எனினும் பேருந்துகள், லாரிகள் மற்றும் பிற வா்த்தக வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை இன்று (ஏப்ரல் 18-ம் தேதி) 35 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிரிமீயம் விலை பெட்ரோல் விலை 35 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விற்பனையாளரான லங்கா ஐஓசி நிறுவனங்களின் டீசல் விலையை லிட்டருக்கு 75 ரூபாய் உயர்த்தி லிட்டருக்கு ரூ.327 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ரூ.35 உயர்த்தப்பட்டு ரூ.367 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்