தெற்கு பசிபிக் நாடான வனுவாட்டு தீவில் நேற்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. இது இந்த வாரத்தில் ஏற்பட்ட 2-வது நிலநடுக்கம் ஆகும்.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வனுவாட்டு தீவின் தலைநகர் போர்ட் விலாவுக்கு வடமேற்கில் சுமார் 442 கி.மீ. தொலைவில் உள்ள சோலா கிராமத்தில் காலை 6.58 மணிக்கு (ஜிஎம்டி) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது” என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எவ்வித சுனாமி எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியில் வனுவாட்டு தீவு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கடந்த 3-ம் தேதியும் வனுவாட்டு தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுவும் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி இருந்தது. இதில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago