கடந்த வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில்தான் கரோனா தொற்று அதிகம்: உலக சுகாதார அமைப்பு

By செய்திப்பிரிவு

கடந்த வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில்தான் கரோனா பரவல் அதிகமாக இருந்தது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “ கடந்த வாரத்தில் உலக அளவில் 20 லட்சத்துக்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகியது. 40,000க்கும் அதிகமாக இறப்பு பதிவாகியது. உலக அளவில் கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும்தான் கரோனா தொற்று அதிகமாக பதிவு செய்யப்பட்டது.

பிரிட்டன், துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளில் கரோனா தொற்று கடந்த வாரம் அதிகமாக பதிவுச் செய்யப்பட்டது.

ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா தொற்று குறைந்துள்ளது. 15 % அளவில் ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளிலும் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம், பல நாடுகள் புதிதாக கரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கரோனாவால் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 24 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

43 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்