காபூலில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படை விமானம் அங்கு சென்றுள்ளது. காபூலில் இருந்து நாடு திரும்பும் சீக்கியர்கள் குருத்துவாரவில் வைக்கப்பட்டிருந்த தங்களின் புனித நூலான கிரந்த சாஹிப்பையும் எடுத்து வந்தனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி இருந்தனர். அங்குள்ள இந்தியா அழைத்து வர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் சி17 விமானம் கொண்டு செல்லப்பட்டது. இந்தியா விமானத்தில் ஏறுவதற்காக வெளியே வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியர்களை மீட்க தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் நேற்று அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
இந்த விமானத்தில் இந்தியர்கள் அல்லாமல் ஆப்கனைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். இந்தியர்கள் மட்டுமின்றி ஆப்கன் நாட்டைச் சேர்ந்த மக்கள் சிலரும் அடைக்கலம் தேடி அகதிகளாக இந்தியா வந்துள்ளனர்.
இந்தநிலையில் காபூலில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி இன்றும் தொடர்கிறது. எனவே காபூலில் உள்ள இந்தியர்கள் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
காபூல் குருத்வாராவில் பாதுகாப்பு கருதி தங்கியிருந்த அவர்கள் பின்னர் காபூல் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களை ஏற்றி வருவதற்காக இந்திய விமானப்படை விமானம் தயார் நிலையில் உள்ளது.
அவர்கள் குருத்துவாரவில் இருந்து சீக்கியர்களின் புனித நூலான கிரந்த சாஹிப்பையும் எடுத்து வந்தனர். அதிகமான பக்கங்கள் கொண்ட அந்த புனித நூலை சூட்கேஸில் பத்திரமாக வைத்து எடுத்து வந்தனர்.
குருத்துவாராவில் புகுந்து தலிபான்கள் சேதப்படுத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக எடுத்து வந்ததாக அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
தமிழகம்
36 mins ago
உலகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago