உலக அளவில் கரோனா பாதிப்பு 20 கோடியை கடந்துள்ளது என்று கரோனா பரவலை பற்றி அறிய உதவும் வோல்டோ மீட்டர் இணைய பக்கம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து வோல்டோ மீட்டர் இணைய தளத்தில், “ உலக நாடுகளில் கரோனா பரவல் 20 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 42 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் பிரேசில் மூன்றாம் இடத்திலும், ரஷ்யா நான்காம் இடத்திலும், பிரான்ஸ் ஐந்தாம் இடத்திலும் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு இறுதியில், கரோனா பரவல் சீனாவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் அடைந்து, முதல் அலை, இரண்டாம் அலை என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் இதுவரை 132 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே உலகம் முழுவதும் கரோனா வைரஸ் மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தெரிவித்தது.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா, இந்தோனேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சுற்றுலா
36 mins ago
சினிமா
41 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago