பிலிப்பைன்ஸில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தலைநகர் மணிலாவில் கடும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ டெல்டா வைரஸ் காரணமாக மணிலாவில் கரோனா அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிலிப்பைன்ஸில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் கரோனாவைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை பிலிபைன்ஸ் அரசு விதித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
டெல்டா கரோனா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது.
அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 mins ago
வணிகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago