பிரேசிலில் ஒரே நாளில் 85,149 பேர் கரோனாவால் பாதிப்பு

By செய்திப்பிரிவு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 85,149 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,216 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 85,149 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்றும் மட்டும் 2,216 பேர் பலியானர். பிரேசிலில் இதுவரை 1.7 கோடி கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,84,235 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் இதுவரை 21 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிரேசிலில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொது வெளியில் முகக்கவசம் தேவையில்லை என்று பிரேசில் அரசு அறிவிக்க உள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறன.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் கரோனா தடுப்பூசியைப் பெரும்பாலான அளவில் செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்