ஈரானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்குகிறது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், ''ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 9,209 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 29,54,309 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் இதுவரை 80,813 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 3,852 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஈரானும் ஒன்று. ஈரானில் 3% பேருக்கு மட்டுமே இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தும் பணியையும் அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago