துருக்கியில் ஒரே நாளில் 54,740 பேர் கரோனாவால் பாதிப்பு

By செய்திப்பிரிவு

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 54,740 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “துருக்கியில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 54,740 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 276 பேர் பலியாகி உள்ளனர். துருக்கியில் உள்ள 81 மாகாணங்களில் 58 மாகாணங்களில் கரோனா தீவிரம் அதிகமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் சுமார் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

53 mins ago

விளையாட்டு

45 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்