மே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கு தேவையான கரோனா தடுப்பு மருந்து கிடைத்துவிடும்: ஜோ பைடன்

By செய்திப்பிரிவு

மே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கு தேவையான கரோனா தடுப்பு மருந்து போதுமான அளவு கிடைக்கும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ பைடன் கூறும்போது, “ கரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது. வரும் மே மாதத்துக்குள் அமெரிக்கர்களுக்கு தேவையான அனைத்து கரோனா தடுப்பு மருந்துகள் போதுமான அளவு கிடைத்துவிடும். அனைத்து மாகாணங்களிலும் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாகப் பெரும் சவாலாக இருக்கும் கரோனா தொற்றைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளைத் தயாரித்து வருகின்றன. உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக்-5 போன்ற இன்னும் பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே.

இந்நிலையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மட்டுமே ஒரே டோஸாக வழங்கப்படும் கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா, அவசரகாலப் பயன்பாடு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்