கரோனா பரவல் தற்போது குறைவாக இருந்தாலும், மீண்டும் அதிகரிக்கலாம் என்று ஜெர்மனி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி நோய் தடுப்பு மையம் தரப்பில், “ ஜெர்மனியில் சமீப காலமாக கரோனா குறைந்துள்ளது. நாம் திருப்பு முனையின் பக்கத்தில் உள்ளோம். எனினும் மீண்டும் கரோனா அதிகரிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கரோனா வைரஸ் குறைந்துள்ளது. எனினும் புதிய வகை கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மார்ச் 14 -ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது.
மாகாண ஆளுநர்களுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏஞ்சலா மெர்க்கல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மேலும் மார்ச் 1 -ம் தேதி முதல் ஜெர்மனியில் கரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட உள்ளன.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
12 mins ago
வாழ்வியல்
3 mins ago
இந்தியா
17 mins ago
தமிழகம்
38 mins ago
சினிமா
34 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
58 mins ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago