மெல்போர்ன், அடிலைடு ஆகியவை இன்றைய ஆஸ்திரேலியப் பெரு நகரங்களில் முக்கியமானவை. அவை எப்படி உருவாயின என்பதைப் பார்ப்போம்.
ஆஸ்திரேலியாவில் தங்கத் தொடங்கிய பிரிட்டிஷ்காரர்கள் ஆட்டுப் பண்ணைகளை அமைத் தனர். அவர்களில் ஒருவரான ஜான் பேட்மேன் என்பவருக்கு மாபெரும் நிலப்பரப்புக்குச் சொந்தக்காரராக வேண்டும் என்று பேராசை முளைத்தது. ஆஸ்திரேலியாவில் இதற்காகப் பயணம் செய்தார். யர்ரா (Yarra) நதிக்கரையில் இருந்த ஓர் இடத்தைப் பார்த்த தும் ‘‘ஒரு கிராமமாகவே விளங்கக் கூடிய இதுதான் என் நகரம்’’ என்று கத்தினார். அங்குள்ள உள்ளூர்வாசிகளுக்கு ஆசை காட்டி அவர்கள் நிலங்களை வாங்கிக் கொண்டார். கொஞ்ச நஞ்சமல்ல இரண்டரை லட்சம் ஹெக்டேர் நிலப்பகுதி! இதற்குப் பதிலாக அவர் கொடுத்தது என்ன தெரியுமா? கம்பளங்கள் மற்றும் கத்திகள் அவ்வளவுதான்.
இதை அறிந்ததும் சிட்னியின் கவர்னர் பர்க் என்பவர் இந்த ஒப்பந்தங்கள் செல்லுபடியாகாது என்றார். ‘’என்ன ஒரு கருணை உள்ளம். உள்ளூர்வாசிகள் ஏமாற் றப்பட்டதை உணர்ந்ததால் உரு வான அறிவிப்பு இது’ என்றெல் லாம் உருக வேண்டாம். ‘இந்த நிலங்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமானது’ என்று கூறிவிட்டு கீலாங் என்ற பகுதியில் பேட்மேனுக்குக் கொஞ்சம் நிலம் ஒதுக்கினார்.
அதே சமயம் தெற்கு ஆஸ்திரேலி யாவில் இருந்த அடிலைடு என்ற பகுதியில் ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் தன் ஊழியர்களைக் குடியமர்த் தியது. இவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகமாகக் கொண்டவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கைதிகளோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். தாங்கள் தங்கிய பகுதியின் நிலங்களைப் பிறருக்கு விற்று அந்த தொகையைப் பயன்படுத்தி ஏழை பிரிட்டிஷ் தொழிலாளிகள் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து குடியமர்த்தினார்கள். ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடி உண்டாக, பிரிட்டிஷ் அரசிடம் இந்த நிறுவனம் ஒப்படைக்கப்பட்டது. இதற்குள் அந்தப் பகுதியில் வெள்ளி, ஈயம், தாமிரம் ஆகியவை அதிக அளவில் கிடைப்பது கண்டுபிடிக்கப்பட, சுரங்கங்கள் உருவாகத் தொடங்கின.
ஆக அபாரிஜின்கள் எனப் படும் உள்ளூர்வாசிகள் கடற் கரைப் பகுதிகளை விட்டு மேலும் ஆஸ்திரேலியாவின் உட்பகுதிக் குச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது. அதுவும் பெரும் பாலும் துப்பாக்கி முனையில் அவர்கள் வெளியேற்றப்பட் டார்கள். ‘‘கொஞ்சம் வாடகை கொடுத்துவிட்டு எங்கள் நிலங் களை அனுபவியுங்கள்’’ என்று கெஞ்சும் அளவுக்கு அவர்கள் இறங்கிவிட்டார்கள். உள்ளூர் வாசிகள் எதிர்த்தால் அவர்களது நீர்நிலைகளில் விஷயத்தைக் கலப்பது போன்ற அராஜகங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஈடுபட்ட னர். இதன் காரணமாக அபாரி ஜின்களிடையே தலைவர்கள் தோன்றலாயினர். இவர்கள் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பை வெளிப் படையாகவே எதிர்க்கத் தொடங் கினார்கள்.
ஆக்ரமித்த வெள்ளையர்கள் வேறொரு விதத்தில் அபாரி ஜின்களை அமைதியாக்கினார்கள். அற்பமான ஊதியத்துக்கு அவர்களை வேலைக்கு (ஆடு மாடுகளை மேய்ப்பது) அமர்த்தி இதன் மூலம் அவர்கள் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்தனர்.
ஆஸ்திரேலியாவின் இயற்கை அழகைப் பற்றி கேள்விப்பட்டு அதிக அளவில் அங்கு ஐரோப்பியர்கள் வரத் தொடங்கினார்கள். ஆஸ்தி ரேலியாவை மேலும் மேலும் கடந்தால் மறுபக்கத்தில் சீனா வந்துவிடும் என்பதுகூட பாமரத்த னமாக எண்ணியவர்கள் இருந் தார்கள். ‘ஆஸ்திரேலியாவின் மறுபுறத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடுகிறது என்று, இல்லை, இல்லை, ஒரு பாலைவனம்தான் இருக்கிறது’ என்றும் பலவித வதந்திகள் பரவின.
இவற்றின் உண்மையை அறியப் பலரும் ஆஸ்திரேலியாவின் மறு பகுதியை நோக்கிப் பயணம் செய்தனர். இவர்களில் சிலர் இறந்து போக, அவர்களை ஹீரோக்களாகக் கொண்டாடி மகிழ்ந்தது ஆஸ்திரே லியா.
கைதிகளை கிழக்கு ஆஸ்திரேலி யாவுக்கு கொண்டு வந்து தள்ளும் பழக்கம் ஒருவழியாக 1840-களில் நிறுத்தப்பட்டது. உன்னதமான வர்கள் தங்குவதற்கேற்ற பிரதேசமாக ஆஸ்திரேலியா கருதப்பட்டதும் ஒரு காரணம்.
1851-ல் நியூ செளத் வேல்ஸிலும் மத்திய விக்டோரியாவிலும் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வளவுதான். ஆஸ்திரேலி யாவில் குடியேறியவர்களில் இருந்து இங்கிலாந்திலிருந்து சிலர் வரை விழுந்தடித்துக் கொண்டு அந்தப் பகுதிகளை நோக்கி செல்லத் தொடங்கினார்கள். தங்கச் சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் சட்டம், ஒழுங்கு கெடத் தொடங் கியது.
சீனாவிலிருந்து படகுகளில் ஏறி பலர் ஆஸ்திரேலியாவுக்கு வந்தனர். தங்கத்தில் அவ்வளவு ஆசை. ஆனால் ஆஸ்திரேலி யாவிலிருந்த வெள்ளையர்கள் ஆசியர்களைத் தடுத்து நிறுத்த, இனக்கலவரம் மூண்டது. நகர மறுத்த சீனர்கள் சிட்னியிலும் மெல் போர்னிலும் வணிகக் கேந் திரங்களை உருவாக்கினார்கள். அதே சமயம் அவர்களில் பலர் சூதாட்டக் கிடங்குகளையும் விபச்சார விடுதிகளையும் தொடங் கினார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. (இன்றளவும் இந்த இரு நகரங்களிலும் சைனா டவுன் எனப்படும் தனித்துவம் மிக்க பகுதிகள் உள்ளன).
தங்கச் சுரங்கங்கள் காரணமாக மெல்போர்ன் மற்றும் சிட்னி தனி கவனத்தைப் பெற்றது. ரயில் போக்குவரத்து, தந்தி வசதி, மின்சார வசதி போன்றவையெல்லாம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
அந்தப் பகுதிகள் ஏதோ கண் காட்சித் திடல் போல் ஆயின. சிறு பொருள்கள் விற்பனையிலிருந்து விபச்சாரப் பெண்களின் நடமாட்டம் வரை நிரம்பி வழியத் தொடங்கின அந்தப் பகுதிகள்.
(உலகம் உருளும்)
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
சினிமா
3 hours ago