கரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து மரணம் அடைந்த மருத்துவரின் முதலாம் ஆண்டு நினைவுதினம்

By செய்திப்பிரிவு

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்து மரணம் அடைந்த மருத்துவர் லி வென்லியாங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் சீனாவின் சமூக வலைதளங்களில் அனுசரிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்து, அவ்வைரஸால் சீன மருத்துவர் கடந்த வருடம் லி வென்லியாங் உயிரிழந்தார்.

வூஹானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரான லி வென்லியாங், கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதிக்கு முன்பாகவே, சார்ஸ் போன்ற புதிய வைரஸ் சீனாவில் பரவுவதாக தனது நண்பர்களிடமும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்திருந்தார்.

ஆனால், லி வென்லியாங்குக்கு சம்மன் விடுத்த சீன போலீஸார், இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தனர்.

லி வென்லியாங் எச்சரிக்கை விடுத்தது போலவே, கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவியது. இதில் லி வென்லியாங்கின் உயிரும் பறிபோனது.

இந்தச் சூழலில், அவ்வைரஸ் குறித்த முதலில் எச்சரிக்கை விடுத்து, உயிரைப் பறிகொடுத்த மருத்துவர் லி வென்லியாங்கின் குடும்பத்தினரிடம் சீன அரசு மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

மேலும், லி வென்லியாங்கின் குடும்பத்திற்கு நிதி இழப்பீட்டையும் சீன அரசு வழங்கியது.

இந்த நிலையில் லி இறந்து ஒரு வருடம் ஆனதைத் தொடர்ந்து சீனாவில் சமூக ஊடகங்களில் அவரது நினைவுத் தினம் அனுசரிக்கப்பட்டது.

தற்போது உலகம் முழுவதும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்துள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்