கிழக்கு சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்குச் சொந்தமான 116 எரிபொருள் லாரிகளை அமெரிக்கத் தலைமை வான்வழித் தாக்குதல் படை அழித்தது.
இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தனது அறிக்கையில் கூறும் போது, “ஒரே வான்வழித் தாக்குதலில் 116 எரிபொருள் லாரிகளும் அழிக்கப்பட்டன. டெய்ர் எஸ்ஸார் மாகாணத்தில் ஐஎஸ் பிடித்து வைத்துள்ள அல்பு கமால் என்ற ஊரில் இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
பெட்ரோலிய வளம் மிகுந்த டெய்ர் எஸ்ஸார் மாகாணத்தின் பெரும்பகுதியை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கூட்டணிப் படைகள் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு சிரியாவில் ஐஎஸ் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இராக்கில் பல்வேறு பகுதிகளில் ஞாயிறன்று 13 முறை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்று பெண்டகன் கூறியுள்ளது
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
9 mins ago
இணைப்பிதழ்கள்
20 mins ago
தமிழகம்
31 mins ago
சினிமா
49 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago