ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பு மருந்துக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து மருந்து உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்னா ஜெயசுமனா கூறும்போது, “ ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை அவசர சிகிச்சைக்கு அளிக்க இலங்கை அரசு அனுமதி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக இலங்கை மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பு மருந்துக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
இலங்கையில் நவம்பர் மாதத்திலிருந்தே கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 56,076 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
தமிழகம்
27 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
53 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago