பாகிஸ்தானில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 11,000-ஐ கடந்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார துறை தரப்பில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11,000-ஐ கடந்தது. இதுவரை பாகிஸ்தானில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அதிகபட்சமாக சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் கரோனா பலி அதிகம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. மேலும், பொதுமக்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சீனாவின் சினோபார்ம் கரோன தடுப்பு மருந்தை அவசர தேவைக்கு பயன்படுத்த பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.
பாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது, எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனாவுக்கு9 .5 கோடி பேர் பாதிப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
17 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
3 hours ago
வலைஞர் பக்கம்
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
இந்தியா
6 hours ago