மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 21, 366 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 21,366 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று மட்டும் 1,106 பேர் பலியாகியுள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவினால் அதிகம் பலியானவர்கள் பட்டியலில் மெக்சிகோ 4-வது இடத்தில் உள்ளது.
மெக்சிகோவில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது, நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மெக்சிகோவில் இதுவரை கரோனாவுக்கு 2,000க்கு அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மெக்சிகோ அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கரோனா இறப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் மெக்சிகோ உள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகம் முழுவதும் 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
50 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago