கரோனா பரவலைத் தடுக்க அவசர நிலையை நீட்டிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் அரசு வெளியிட்ட செய்தியில், “ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட சில நகரங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தொடர் கரோனா பரவலை தடுக்க அங்கு அவசர நிலையை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒசாகா, க்யோடோ ஆகிய மாகாணங்களிலும் அவசர நிலை அறிவிக்கப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க ஜப்பான் பிரதமர் சுகா, அமைச்சர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து தலைநகர் டோக்கியோவில் கடந்த சனிக்கிழமை முதல் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டது.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பைத் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 secs ago
விளையாட்டு
22 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
48 mins ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
46 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
2 hours ago