கரோனா பரவல் அதிகரிப்பு: ஜெர்மனியில் ஊரடங்கு நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

ஜெர்மனியில் கரோனா அதிகரித்து வருவதால் ஜனவரி முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கபடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி அரசுத் தரப்பில், “ ஜெர்மனியில் கடந்த சில நாட்களாகவே கரோனா அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து 16 மாகாணங்களில் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு ஜனவரி முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் நடத்திய அவசர கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் கரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. அதில் ஜெர்மனியும் ஒன்று.

கரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

விளையாட்டு

16 mins ago

இணைப்பிதழ்கள்

42 mins ago

தமிழகம்

52 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்