லண்டனில் உருமாறிய கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அங்கு பள்ளிகளை மூட பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து லண்டன் மேயர் சாதிக் கான் கூறும்போது, “ கரோனா பரவலை அரசு கணித்துள்ளது, இதனைத் தொடர்ந்து லண்டனில் பள்ளிகள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது சரியான முடிவு. நான் கல்வி துறை அமைச்சர் நிக் ஜிம்க்கு நன்றி கூறுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் புதியவகை கரோனா பரவல் அதிகரித்தைத் தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுக்கு தடை விதித்துள்ளன.
முன்னதாக, பிரிட்டனின் மருந்து மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் (எம்ஹெச்ஆர்ஏ) அளித்த அறிக்கையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்குப் பயன்படுத்தலாம். பாதுாப்பானது, வீரியமாகச் செயல்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இந்தியாவில் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago