இந்தோனேசியாவில் கரோனா பாதிப்பு 7 லட்சமாக அதிகரிப்பு: கிழக்கு ஆசியாவிலேயே அதிக பாதிப்புள்ள நாடானது

By செய்திப்பிரிவு

இந்தோனேசியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,35,124 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை தரப்பில், “இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,002 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,35,124 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்படுள்ளது.

மேலும், நேற்று மட்டும் 241 பேர் பலியாக, இந்தோனேசியாவில் 21,944 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர் .

நாட்டின் 34 மாகாணங்களிலும் கரோனா பரவி உள்ளது. கரோனா பாதிப்பைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆசியாவில் தற்போது கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தோனேசியா அறியப்படுகிறது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சவூதி ஆகிய நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

வணிகம்

38 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்