பிரிட்டனில் இவ்வாரத்தில் 20 லட்சம் மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்த வேண்டும் என்று லண்டன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லண்டன் ஆராய்ச்சி மருத்துவம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பிரிட்டனில் மூன்றாம் கட்ட கரோனா அலையைத் தவிர்ப்பதற்கு இவ்வாரத்தில் 20 லட்சம் மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் வரும் நாட்களில் கரோனா பரவலைத் தடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகப் பல்வேறு தளர்வுகளை பிரிட்டன் அரசு அறிவித்திருந்த நிலையில், புதிய வகை கரோனா வைரஸ் பரவலையடுத்து, அந்தத் தளர்வுகளை ரத்து செய்தது.
இதற்கு முன்புவரை 3-வது படிநிலைக் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு முதல் 4-வது படிநிலை ஊரடங்கைக் கடுமையாக அமல்படுத்தியுள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
புதிய வகை கரோனா வைரஸ், ஏற்கெனவே இருக்கும் கரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரிட்டனுக்கான விமானச் சேவையை 40க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன.
இந்த நிலையில் புதிய வகை கரோனா வைரஸுக்கு மாடர்னா, பைசர், ஸ்புட்னிக்-5 ஆகிய தடுப்பு மருந்துகள் பயனளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
15 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
3 hours ago
வலைஞர் பக்கம்
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
இந்தியா
6 hours ago