பைஸர் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க அதிபராக தேந்தெடுக்கப்பட்டு ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இன்று நான் கரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொண்டேன். கரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதற்காக ஒய்வில்லாமல் உழைத்த விஞ்ஞானிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அமெரிக்க மக்களே கரோனா தடுப்பு குறித்து பயப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை
தடுப்பு மருந்து இருப்பின் நீங்கள் அதனை தாரளமாக போட்டுக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டார்.
ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
மேலும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்க தலைவர்கள் பலரும் கரோனா தடுப்பு மருந்தை பெற்று வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 secs ago
இந்தியா
18 mins ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago