ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் கரோனா அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் தரப்பில், “ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வடக்குப் பகுதிகளில் மீண்டும் கரோனா பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு பயணத் தடைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள்
சமூக இடைவெளியை கவனமாகக் கையாளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனை மக்கள் கவனமாகப் பின்பற்றினால் கிறிஸ்துமஸை சிறப்பாகக் கொண்டாடலாம்” என்று தெரிவிக்கபட்டுள்ளது.
விக்டோரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் 28,094 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,486 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் பல்வேறு தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. இதனால் பல நாடுகளில் கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago