வங்கதேசத்தில் கரோனா பலி எண்ணிக்கை 7,000-ஐ நெருங்குகிறது.
இதுகுறித்து வங்கதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,884 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,14,318 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 19 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கரோனா பலி எண்ணிக்கை 6,986 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் சதவீதம் 81.46 ஆக உள்ளது. கரோனா பரவலைத் தடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் உள்ளன. இதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன.
ஆனால், கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
33 mins ago
ஜோதிடம்
43 mins ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
க்ரைம்
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago