1,00,000 பேருக்கு கரோனா தடுப்பு மருந்து முன்னதாகவே செலுத்தப்பட்டது: ரஷ்யா

By செய்திப்பிரிவு

ரஷ்யாவில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பு மருந்து முன்னதாகவே செலுத்தப்பட்டுவிட்டது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் முன்னதாகவே ஒரு லட்சம் பேருக்கு ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் அடுத்த வாரம் மிகப்பெரிய எண்ணிக்கையில் கரோனா தடுப்பு மருந்து நாட்டு மக்களுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்