ஜெர்மனியில் டிசம்பர் மாதம்வரை ஊரடங்கு நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

ஜெர்மனியில் டிசம்பர் மாதம்வரை ஊரடங்கை நீட்டிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, “நாட்டில் பகுதி நேர ஊரடங்குக்குப் பிறகு கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. எனவே, 16 மாகாணங்களில் ஆளுநர்களுடன் கலந்து ஆலோசித்து டிசம்பர் மாதம்வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் கடந்த 3ஆம் தேதி முதல் பகுதி நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

வரும் வாரங்களில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இருக்க வேண்டும் என்றும், ஜெர்மனி மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் கரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் அழைப்பு விடுத்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

6 mins ago

சுற்றுச்சூழல்

34 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

மேலும்