மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,426 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை தரப்பில், “ மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,426 பேர் கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,25,969 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மெக்சிகோவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,00,823 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கஹ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மெக்சிகோ அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கரோனா இறப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் மெக்சிகோ உள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பலவகையான தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
தடுப்பூசி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கையில், பல நாடுகளும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
சுற்றுச்சூழல்
15 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
10 mins ago
விளையாட்டு
31 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago