பிலிப்பைன்ஸில் கரோனா தொற்று 3,90,000 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பிலிப்பைன்ஸில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,90,000 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், “பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,90,000ஆக அதிகரித்துள்ளது.
7,409 பேர் பலியாகி உள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் இந்தோனேசியாவுக்கு அடுத்து பிலிப்பைன்ஸில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,690 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

இதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன. ஆனால், கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

58 mins ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்