பாகிஸ்தான் இன்னும் கரோனா வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இம்ரான்கான் கூறும்போது, ''பாகிஸ்தான் மக்கள் சுகாதார முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் அடுத்த இரண்டு மாதத்துக்குள் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளது. ஆனால், நாம் இன்னமும் கரோனா வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இதுவரை 3,30,200 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,759 பேர் பலியாகி உள்ளனர். 3,11,814 பேர் குணமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 500க்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இவ்விரு மாகாணங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்குப் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
13 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
31 mins ago
சுற்றுச்சூழல்
41 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
36 mins ago
விளையாட்டு
57 mins ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
5 hours ago