கரோனா: பிரிட்டனில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

By செய்திப்பிரிவு

பிரிட்டனில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதாகவும், அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து பிரிட்டன் ஊடகங்கள் தரப்பில், “பிரிட்டனில் கடந்த வாரத்தில் மட்டும் 1,53,483 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு சதவீதமும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1,272 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரிட்டனில் பலியானவர்களின் எண்ணிக்கை 44, 998 ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பள்ளிகள், உணவு விடுதிகள் ஆகியவை பிரிட்டனில் திறக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரிட்டனில் கரோனா பரவல் அக்டோபர் மாதத்தில் தீவிரமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தாலியிலும் கரோனா பரவல் தீவிரமாக உள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு இங்கிலாந்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாகி வருகிறது. மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

2 mins ago

தமிழகம்

19 mins ago

வாழ்வியல்

10 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

45 mins ago

சினிமா

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்