தென்கொரியாவில் குறையும் கரோனா

By செய்திப்பிரிவு

தென் கொரியாவில் புதிதாக 76 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தென்கொரிய அரசுத் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 76 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நான்காவது நாளாக 100க்கும் குறைவானவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சுமார் 25,275 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா இறப்பு விகிதம் 1.76% ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் சதவீதம் 92% ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன்பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன.

இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் தென்கொரியாவில் இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டது.

இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்கொரியாவில் அதற்கு முன்னரே தொடங்கியது. இந்த நிலையில் தற்போது கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தென்கொரிய நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 mins ago

தமிழகம்

56 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்