சீனாவின் ஜிங்டவ் நகரில் 6 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு 90 லட்சம் மக்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ சீனாவில் கடற்கரை நகரான ஜிங்டவ் நகரில் 6 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்நகரில் உள்ள 90 லட்ச பேருக்கு 5 நாளில் கரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
கருத்துப் பேழை
13 mins ago
இந்தியா
19 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
25 mins ago
வலைஞர் பக்கம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago