அர்ஜென்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,392 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அர்ஜென்டினா சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''அர்ஜென்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,392 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அர்ஜென்டினாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,51,001 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு நேற்று 419 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 16,937 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில், அர்ஜென்டினா, மெக்சிகோ ஆகிய நாடுகள் கரோனா தொற்றினால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகம் முழுவதும் சுமார் 3 கோடிக்கும் அதிகமான நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்தனர்.
கரோனா தடுப்பு மருந்து பரவலாக உலகம் முழுவதும் கிடைக்கும் வரை கரோனா வைரஸ் பாதிப்பால் 20 லட்சம் பேர் வரை பலியாகி இருப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
இந்தியா
46 mins ago
ஓடிடி களம்
47 mins ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
4 hours ago