வரவிருக்கும் நாட்களில் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தென்கொரிய பாதுகாகாப்பு அதிகாரிகள் தரப்பில், “வடகொரியா இன்னும் சில தினங்களில் கடற்கரைப் பகுதிகளில் ஏவுகணை பரிசோதனையை செய்ய திட்டமிட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாங்கள் தொடர்ந்து தென்கொரியாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம் என்றும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வட கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75 வது ஆண்டுவிழா ஆக்டோபர் மாதம் 10 -ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் மிகப் பெரிய ஏவுகணைகளை வடகொரியா காட்சிப்படுத்த உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி வடகொரியா கேஎன்-24 என்ற குறுகிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து இதுபோல் செய்து வருகிறது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago