கிழக்கு லடாக் பகுதியில் பதற்றத்துக்குக் காரணம் சீன அதிபர் ஜின்பிங் தான். இந்திய எல்லையில் இன்னொரு தாக்குதலுக்கு அவர் உத்தரவிடுவார் என்று அமெரிக்க ஊடகம் ஒன்று எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் நியூஸ் வீக்கில் வெளியிடப்பட்ட கட்டுரையில், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான சீன அதிபர் ஜின்பிங் லடாக்கில் உள்ள இந்திய நிலைகளுக்கு எதிராக "மற்றொரு பயங்கரத் தாக்குதலை தொடங்க சீன ராணுவத்திற்கு உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக ஜின்பிங்கைப் பொறுத்தவரை, அவர் இந்தியாவுக்குள் செயல்படுத்த நினைத்த ஆக்கிரமிப்பு நகர்வுகள் மற்றும் அவரது இராணுவம் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்துள்ளது. இந்திய எல்லையில் சீன இராணுவத்தின் பின்னடைவுகள் விளைவுகளை ஏற்படுத்தும்.
சீன ராணூவத்தின் பின்னடைவு, கட்சியில் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவரான ஜின்பிங்குக்கு ராணுவத்தில் தனது விசுவாசிகளை நியமிக்க ஒரு வாய்ப்பை அளிக்கிறது. சீன இராணுவம் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பின்வாங்குவதாகவும், சீன அதிபரை இந்தியப் படைகள் மீது மற்றொரு தாக்குதலைத் தொடங்க தூண்டுவதாகவும் அந்த கட்டுரை எச்சரித்து உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
13 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
31 mins ago
சுற்றுச்சூழல்
41 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
36 mins ago
விளையாட்டு
57 mins ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
5 hours ago