பிரான்ஸில் கரோனா தொற்று கட்டுப்படுத்த மக்ரோன் ஆலோசனை

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக பிரான்ஸில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை வந்துள்ளதாக பிரான்ஸ் அரசு கவலை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு பிரான்ஸில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து பிரான்ஸ் ஊடங்கங்கள் ,” பிரான்ஸில் கரோனா வைரஸ் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸில் மார்சேய் மற்றும் லியோன் ஆகிய நகரங்கள் கரோனா தொற்றால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,000 பேர்வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு காலகட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீப நாட்களாக கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

கருத்துப் பேழை

43 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

27 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 mins ago

மேலும்