ரஷ்ய எதிர் கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியிடம் அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக ரஷ்ய போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர், அலெக்ஸி நவால்னி கோமாவிலிருந்து மீண்டதாக பெர்லினின் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அலெக்ஸி நவால்னியிடம் விசாரணை நடத்த இருப்பதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய போலீஸார் இன்று (வெள்ளிக்கிழமை) தரப்பில், “ அலெக்ஸி நவால்னியிடம் விசாரணை நடந்த மருத்துவ அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம்தான் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு உறுதிப்படுத்தியது. மேலும், ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு புதின் விஷம் வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று ஜெர்மனி தெரிவித்தது.
மேலும் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக அந்நாடு தெரிவித்தது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் அலெக்ஸி நவால்னியிடம் விசாரணை நடத்த ரஷ்யா முயன்று வருகிறது.
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.
ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
தமிழகம்
12 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
46 mins ago
விளையாட்டு
38 mins ago
இந்தியா
46 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago