தென்கொரியாவில் கடந்த 16 நாட்களாக மூன்றிலக்க எண்களில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் படுக்கை வசதிகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
“தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 308 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 19,400 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தென்கொரியாவில் 16 நாட்களுக்கு மேலாக கரோனா தொற்று மூன்று இலக்க எண்களில் பதிவாகி இருக்கிறது” என்று வடகொரியா நோய்த் தடுப்பு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “தென்கொரியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சியோலில் மிகவும் மோசமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு வெறும் 15 படுக்கைகள் மட்டுமே உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது.
தென்கொரியாவின் தலைநகரான சியோலில் நோய்த்தொற்றுகள் பரவி, நாடு தழுவிய அளவில் பரவக்கூடிய அச்சுறுத்தலில் நாம் இருக்கிறோம் என்று அந்நாட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மக்கள் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறு தென்கொரிய அரசு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணித்திருந்தோம். ஆனால், எங்கள் கணிப்பு பொய்யாகியுள்ளது. மே மாதத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் மக்கள் புழக்கம் அதிரிகத்தது. அதன் விளைவாக தற்போது இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று தென்கொரிய நோய்த் தடுப்பு மையம் முன்னரே தெரிவித்து இருந்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
17 mins ago
தமிழகம்
38 mins ago
இந்தியா
24 mins ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
5 hours ago