உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 கோடியைத் தாண்டியுள்ளது.
“தற்போதைய நிலவரப்படி 1.5 கோடி மக்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஆண்டுதோறும் கடுமையான காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம். கடந்த ஏழு மாதங்களில் கரோனா வைரஸால் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது என்றும், இந்நாடுகளில் சுமார் 40,000 பேர்வரை ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று பதிவாகி வருகிறது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.
கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் சமீபத்தில் வெற்றி அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
7 hours ago