சீனாவில் புதிதாக 22 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில், ''சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் மேற்குப் பகுதியில் உள்ள சின்ஜியாங் மாகாணத்தின் உரும்க்யூ நகரில் 16 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் உள்ளூரிலேயே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரோனா தொற்று விரைவில் சின்ஜியாங் மாகாணத்தில் கட்டுப்படுத்தப்படும் என்றும், அம்மாகாணத்துக்கான போக்குவரத்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த்தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் கடந்த 10 நாட்களாக யாருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
2 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago