பாகிஸ்தானில் புதிதாக 2,752 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,351 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,752 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 65 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாகிஸ்தானில் பலியானவர்களின் எண்ணிக்கை 5,123 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் இதுவரை கரோனாவால் 2,46,351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1,53,134 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்ததாகவும் பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. சிந்து மாகாணத்தில் 1,02,368 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட, பஞ்சாப் மாகாணத்தில் 29,775 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக் காட்டி, அதிபர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார்.
இந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள் வாரத்திற்கு 5 நாட்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மதக் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை
முக்கிய செய்திகள்
வணிகம்
6 mins ago
தமிழகம்
52 mins ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
4 hours ago