கரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும் நிலையில் உலக நாடுகளிடம் ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர் கருவிகள் பற்றாக்குறை இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், ''உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியாக அதிகரிக்கும் நிலை உள்ளது. இந்த சூழலில் தற்போது உலக நாடுகள் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் கருவி (காற்றில் இருக்கம் நைட்ரஜனைப் பிரித்து, ஆக்ஸிஜனை மட்டும் நோயாளிகளுக்கு அளிக்கும் கருவி) பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. சுவாசிப்பதில் சிரமம் கொள்ளும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் உதவுகின்றன.
இந்த நிலையில் இந்தப் பற்றாக்குறையை நீக்க சுமார் 14,000 ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் கருவிகளை 120 நாடுகளுக்கு வரும் வாரங்களில் வழங்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 95,34,448 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,85,176 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் உள்ள கரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் திறன்கொண்ட டெக்ஸாமெதாசோன் மாத்திரைகளை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago