கடந்த 24 மணி நேரத்தில் உலக முழுவதும் சுமார் 1,83,020 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ஞாயிற்றுக்கிழமை மட்டும் உலகம் முழுவதும் சுமார் 1,83,020 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,7423 பேர் உலக முழுவதும் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலவரப்படி 87,08,008 பேர் உலக முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அமெரிக்கா தொடர்ந்து தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 23, 56,657 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.
தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால்,பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான பல்வேறு முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஆன்மிகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago