பாகிஸ்தானில் கரோனா பலி 3,382 ஆக அதிகரிப்பு 

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு நாடு முழுவதும் 153 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3, 382 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 153 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பலி எண்ணிக்கை 3,382 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 6,604 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் இதுவரை 1,71,665 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் 65,163 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 64, 216 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்லமாபாத்தில் 10,279 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாத இறுதியில் பாகிஸ்தானில் கரோனா தொற்று தற்போதுள்ள எண்ணிக்கையை விட இரு மடங்காக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் கரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கை அமல்படுத்துமாறு எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் பொருளாதாரத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தவிர்த்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்