கரோனா: பிரேசிலில் பலி எண்ணிக்கை 34, 031 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 1,437 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை 34,031 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, ''பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 1,437 பேர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனாவுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 34,031 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கரோனா வைரஸால் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகளில் பிரேசில் முன்றாவது இடத்தில் உள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

பிரேசிலில் வியாழக்கிழமை மட்டும் 30,925 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,14,941 ஆக அதிகரித்துள்ளது.

210 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிரேசில் கடந்த இருவாரமாக கரோனா வைரஸின் மையமாக மாறியுள்ளது.

கரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்திலும் (அமெரிக்காவில் 19, 24,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்) , பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் பிரேசிலில் இருந்து மக்கள் வருவதை அமெரிக்கா தடை செய்துள்ளது.

கரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அலட்சியமாக நடந்து வருவதாக உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா தொற்று ஜூன் மாதம் மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

47 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்