ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 894 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் சுகாதார துறை அமைச்சகம் கூறும்போது, “ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 894 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,898 ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு சுமார் 237 பேர் பலியாகி உள்ளனர், 12,755 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அதிகமான கட்டுப்பாடுகளை ஐக்கிய அரபு அமீரகம் விதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதுமான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுசெய்ய பல்வேறு நடவடிக்கைகளையும், நிதித் திட்டங்களையும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்து வருகிறது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசிய நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
4 hours ago