கரோனா பரவலை கட்டுப்படுத்த லெபனானில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லெபனான் ஊடகங்கள் கூறும்போது, “ வியாழக்கிழமை மட்டும் லெபனானில் 63 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லெபனானில் கரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் லெபனான் அரசு ஜூன் 7 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் லெபனான் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இந்த நிலையில் தொற்று அதிகமானதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு ஐந்தாவது முறையாக லெபனான் அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. லெபனானில் முதல் முறையாக கடந்த மார்ச் 15 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
லெபனானில் இதுவரை 1,024 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 26 பேர் பலியாகியுள்ளனர். 663 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின்,பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,97,863 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
ஜோதிடம்
6 mins ago
ஜோதிடம்
59 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
உலகம்
3 hours ago